காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர்டெலிவரியாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

from Oneindia - thatsTamil