மும்பை: புரோ கபடி லீகின் 9-வது சீசன் எதிர்வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்களுக்கு மேல் இந்த தொடர் நடைபெறும் என தெரிகிறது. இதன் இறுதிப் போட்டி டிசம்பர் மாத மத்தியில் நடைபெற உள்ளதாம். பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் என மூன்று நகரங்களில் இந்த சீசன் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 9-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் குமன் சிங்கை சுமார் 1.21 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது ‘U Mumba’ அணி. இதுதான் இந்த ஏலத்தில் ஒரு வீரருக்கும் கிடைத்த அதிகபட்ச விலையாக உள்ளது. ‘தமிழ் தலைவாஸ்’ உட்பட மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்