
டோக்கியோ: நடப்பு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது, ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய சாத்விக் சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை. இந்தப் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் என்ற வகையில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
நடப்பு BWF உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் இந்தியா பங்கேற்றது. இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments