
சென்னை: நடப்பு 2022-ம் ஆண்டில் ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் ஆண்டை நிறைவு செய்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை காயம் காரணமாக அவர் மிஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் ரோகித். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்கள் பதிவு செய்த பேட்ஸ்மேனும் கூட. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவர் காயத்தால் அணிக்குள் வருவதும், போவதுமாக உள்ளார். அதற்கு உதாரணமாக பல தொடர்களை சொல்லலாம். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றதும் இந்திய அணி ஐசிசி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால், அதுவும் பொய்த்துப் போனது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments