
கத்தாரில் நடைபெற்ற நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடர் இதுவரையிலான இந்த தொடரின் வரலாற்றிலேயே மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்ட உலகக் கோப்பை என்றும், அதுவும் பிரான்ஸ் - அர்ஜென்டினா மோதிய இறுதிப் போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ஆல் டைம் கிரேட் என்றும் பரவலாக உற்சாகத்தின் உச்சியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் நகரத் தெருக்களில் கூச்சலும் கொண்டாட்டங்களும் கொடிகளும் பறந்தன.
அர்ஜென்டினாவின் மதுபான விடுதிகளில் கியூவில் நின்றபடி மக்கள் மதுக்கோப்பையும் கையுமாக போட்டியை பதற்றத்துடன், உற்சாகத்துடன் ரசித்தது வைரலாகி வருகிறது. அதுவும் மெஸ்ஸி பெனால்டியில் முதல் கோலை அடித்தபோதும், பிறகு ஏஞ்சல் டி மரியா 36-வது நிமிடத்தில் அபார கோலை அடித்தவுடனும் மதுபான விடுதிகளில் டேபிளைத் தட்டும் ஓசையும், உற்சாக அலறல்களும், சந்தோஷ வீறிடல்களும் தொலைக்காட்சியின் வர்ணனை காதில் விழாத அளவுக்கு பேச்சுகளும் நிரம்பி வழிந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments