
கராச்சியில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. 2008-ம் ஆண்டிற்குப் பிறகு துணைக்கண்டத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய தொடக்க இடது கை வீரர் ஃபகர் ஜமானின் 101 ரன்கள் சதம் மூலம், ரிஸ்வானின் 77 ரன்கள் பங்களிப்பினால் 280/9 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டெவன் கான்வே (52), கேன் வில்லியம்சன் (53) அரைசதம் அடித்து அடித்தளம் அமைக்க பின்னால் இறங்கிய கிளென் பிலிப்ஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசியதில் 281/8 என்று அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments