ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிக் பாஷ் டி20 ஆஸ்திரேலிய லீக் போட்டியில் பிரிஸ்பன் ஹீட் வீரர் மைக்கேல் நெசர், சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர் ஜோர்டான் சில்க் என்ற வீரருக்கு பவுண்டரியில் பிடித்த பிரமிப்பூட்டும் கேட்ச் அனைவரையும் அசத்தியிருந்தாலும் இப்படி எல்லாம் பிடித்தால் அது கேட்சா? என்ன ஒரு வரைமுறை இல்லையா என்ற சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பிரிஸ்பன் ஹீட் அணி 20 ஓவர்களில் 224 ரன்களைக் குவிக்க சிட்னி சிக்சர்ஸ் அணி அதை பரபரப்பாக விரட்டிக் கொண்டிருந்த போது ஜோர்டான் சில்க் (23 பந்தில் 41, பிரிஸ்பன் ஹீட் பவுலர் மார்க் ஸ்டெகிடீ வீசிய பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார், பந்து சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது, ஆனால் பவுண்டரி அருகே நின்று கொண்டிருந்த மைக்கேல் நெசர் பந்தை கேட்ச் எடுத்து விட்டார். ஆனால் எல்லைக் கோட்டைப் பந்துடன் கடந்து விடுவோம் என்று தெரிந்த அவர் பந்தை லேசாக மேலே விட்டெறிந்தார் ஆனால் அதுவும் எல்லைக் கோட்டைக் கடந்து விட்டது ஆனால் காற்றில்தான் இருந்தது, நெசர் எல்லை தாண்டிய நிலையிலேயே மேலே எழும்பி பந்தைப் பிடித்து அப்படியே அந்தரத்தில் இருந்த படியே பந்தை மைதானத்திற்குள் மேலே விட்டெறிந்தார். பிறகு எல்லைக் கோட்டை வெளியிலிருந்து தாண்டி உள்ளே வந்து காற்றில் இறங்கிய பந்தைப் பிடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்