செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil