ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மார்ச் 9-ம் தேதி அகமதாபாத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா சமன் செய்ய விரும்பும். மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டனர், அதனால் ஓரளவுக்கு அவர்கள் பிரஷர் இல்லாமல் சுதந்திரமாக ஆட முடியும். எப்போதும் சுதந்திரமாக ஆடக்கூடிய ஆஸ்திரேலிய அணி படு அபாயகரமானது என்பதை இந்திய அணியினர் அறிவார்கள்.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளுமே சேர்த்து மொத்தமே ஏழரை நாட்கள்தான் நடந்தன. அந்த அளவுக்கு ‘வயல்வெளி’, கிடுகிடு குழிப்பிட்ச்களைப் போட்டனர், அதில் விவரம் தெரிந்த ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியில் கடந்த டெஸ்ட்டில், அட்டாக்கிங் கேப்டன்சியினால் ஆஸ்திரேலிய அணி இந்தியாவைப் பந்தாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்