
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றதற்கு தோனியின் தவறான கேப்டன்சிதான் காரணம் என்று விரேந்திர சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
முதலில் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியாமல் திணறியதால் ருதுராஜ் இன்னிங்ஸிற்குப் பிறகே சுணங்கிப் போய் 178 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே. அந்தப் பிட்சில் 178 என்பது சரிசம ஸ்கோர் அல்ல. 10-20 ரன்கள் குறைவான ஸ்கோரே. அதன் பிறகு தோனியின் கேப்டன்சி, அவரது பழைய சாமர்த்தியம், புத்திசாலித்தனங்கள் இல்லாமல் சொதப்பலாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments