மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

இறுதிப் போட்டி மும்பை மாநகரின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டிருந்தனர். மறுபக்கம் நாடு முழுவதும் அன்றைய தினம் கோடான கோடி மக்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். அத்தனை பேருக்கும் இருந்த ஒரே எதிர்பார்ப்பு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது மட்டும் தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்