ஸ்ரீநகர்: எல்லையில் லடாக் எதிரே தனது எல்லைக்குள் சீனா j20 எனப்படும் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. லடாக் அருகே இருக்கும் இடங்களில் இந்த விமானங்களை நிறுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் பாங்காங் டிசோ பகுதியில் நுழைய முயற்சிப்பதற்கு முன்பாக இந்த விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது.

from Oneindia - thatsTamil