ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை தன் மட்டை வீச்சினால் மட்டுமே அடித்து நொறுக்கினார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பிட்ச் மந்தமான நிலையில் பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்க திணறும் நிலையில் உண்மையில் அதிமனிதனாக அதிவீரராக ஏபிடி-யை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 33 பந்துகளில் 73 ரன்கள், கடைசி 5 ஒவர்களில் 80-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டது.

உலகின் சிறந்த பேட்ஸ்மெனான கோலியே ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது. 194/2 என்று ஸ்கோரை எங்கோ கொண்டு சென்றார் டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், மோரிஸ் ஆகியோரிடம் 12 ரன்களுக்கு மடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்