ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் விளையாடியபோது நானும்கூட ரசிகர்களிடம் இனவெறிப் பேச்சை எதிர்கொண்டேன். இதுபோன்ற பேச்சுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்