16 வயது வில்வித்தை வீரரான பிரகதி சவுத்ரி, மூளை முடக்குவாதத்தில் இருந்து மீண்டு, தற்போது உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

வில் வித்தை வீரரான பிரகதி கேலோ இந்தியா வெற்றியாளர். இவர் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்குப் பல்வேறு உள்ளங்களின் உதவியுடன் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. 2 மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடக்க ஆரம்பித்தார் பிரகதி. அதற்குமே அவர் பிஸியோதெரபி செய்ய வேண்டி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்