அகமதாபாத்தில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடையே சூடான வாக்குவாதம் நடந்தது. அதன்பின் நடுவர் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.

அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியை டிரா செய்தாலோ அல்லது வென்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆதலால், இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டியாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்