
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார் சாம் கர்ரன்.
2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடியவர் இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரர் சாம் கர்ரன். ஆல்-ரவுண்டரான இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. மொத்தம் 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 337 ரன்கள் மற்றும் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அவர். இந்நிலையில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments