எட்ஜ்பாஸ்டன்: தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் பேர்ஸ்டோவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பேர்ஸ்டோவிடம் கோலி வார்த்தைப் போரில் (ஸ்லெட்ஜ்) ஈடுபட்டு இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் சமனில் முடிந்தாலோ இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 257 ரன்கள் முன்னிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்