ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில் விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவதைக் கண்டித்து சென்னையில் வரும் 5-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் அறிவித்துள்ளார். ஆண்டாள் குறித்த ஆய்வு கவிஞர் வைரமுத்துவின் விவகாரத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியவர் சடகோப ராமானுஜ ஜீயர்.

from Oneindia - thatsTamil