
கோவா: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் கோவா அணிக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். இது அவர் விளையாடும் முதல் தர கிரிக்கெட் போட்டி.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல்லாயிரம் ரன்கள் குவித்த பேட்ஸ்மேன். அவரை பார்த்து வளர்ந்த அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments