
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 4,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மொத்தம் 54 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் இதை எட்டியுள்ளார். தோனிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பந்த் படைத்துள்ளார்.
25 வயதான பந்த் கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். 31 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். இதன் மூலம் மொத்தம் 4021 ரன்களை குவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments